Sunday, April 8, 2012

உயிருள்ளவரை...



பள்ளிகள் வீடாகின..
வீடுகள் சேறாகின..
வீதிகள் விலாசம் மறந்தன..
நாடுகள் காடாகின..
காடுகள்
பசுமை ஆடை களைந்து
நிர்வாணமாகின..
சிரிப்புகள் கூட விம்மியழுதன..
மரங்கள் இலையை
கண்ணீராய்ச் சொரிந்தன..
கட்டிடங்கள் கற்களாயின..
மயானங்கள் மைதானமாயின..
நீ வந்து போனவேளை

அன்னையாய் உனை நினைத்தோம்
அசுரன் என்று காட்டி விட்டாய்
தந்தையாய் உனை நினைத்தோம் - எல்லாம்
தலைகீழாய் மாற்றிவிட்டய்.
ஆளில்லை உனக்கின்று பிணை நிற்க
ஆளெல்லாம் ஆகிவிட்டார் பிணமாக
அலையலையாய் நீ வந்து
தலைதலையாய் கொண்டு போனாய்

சோலை  வனமெல்லம்
பாலைவனம் ஆகியது
நீ வந்துபோனவேளை

பூமித்தாய் என்ன செய்தாள்
நீயிங்கு பொங்கி வர
சொல்லாமல் வந்து பெரியவனாகிவிட்டாய்

உப்பிட்டுப் போன உன்னை
உயிருள்ள வரை மறக்கமாட்டோம்.

கட்டித் தழுவிய நீ
கடித்துக் குதறினாய்..
ஏதோ
'சுனாமி'யாம் என்று

No comments:

Post a Comment