Sunday, April 8, 2012

தென்றலும் நானும்



சந்திக்க வேண்டும்- என்
சிந்தனை தூண்டும் - உன்
சின்ன விரல்களை
இன்று போல் என்றும் - நான்
சந்திக்க வேண்டும்

உன்னை நான்
வெறுப்பதுண்டு
நித்தமும் நீ
சத்தமின்றி - அவளை
முத்தமிடும் போது மட்டும்

தென்றலே....
நீ
வந்து போகையில்
வெந்துபோகிறேன் நான்
என்னவளின் மென்மனதை
வென்று போவதால்

உனைப் பார்த்து நான்
அறிவு கொண்டேன்
ஆபத்தின்
ஆரம்பங்கள் எல்லாம்
அமைதிதான் என்று.

No comments:

Post a Comment