Sunday, April 8, 2012

கண்காட்சி



ஓவியனைக் காணவில்லை
தூரிகையும் தெரியவில்லை
என்னே அழகு!
எங்கே வர்ணம் பெற்றான்?
இத்தனை ஜாலங்கள்
எங்கிருந்து கற்றிருப்பான்?

கண்களை ஏமாற்றும்
கலைகளும் கற்றவனோ?

ஓவியக் கண்காட்சி
அமைதியாய் நடக்கிறது

விளம்பரங்கள் ஏதுமில்லை
விளக்கங்களும் கொடுப்பதில்லை
மூலை முடுக்கெங்கும்
முக்கிய காட்சிகள்தான்
அனைத்தும் பிரமாண்டம்

காலையில் கிழக்கிலும்
மாலையில் மேற்கிலும்
பிரதான காட்சிகள்


காலாவதி தேதியில்லை
அனுமதியும் இலவசந்தான்
என்றாலும்,
அணுவணுவாய் ரசிப்பவர்கள்
ஆயிரத்தில் ஓரிருவர்

சிதறல்கள் ஏதுமில்லை
திருத்தங்கள் தேவையில்லை
அதோ தெரிகிறது!
இயற்கையின் கண்காட்சி.

No comments:

Post a Comment