Sunday, April 8, 2012

நீயின்றி நாமில்லை



நகரம் தந்து
நகர்ந்து சென்றாய்
அப்போது புரியவில்லை
நீயற்ற இடம்
நிம்மதியற்ற
நரகம் என்று

நிஐமான நிழலுக்காய்
நெடுங்காலம் காத்திருப்போம்
நீயின்றி நாமில்லை
நாமில்லா நாள்கூட
நீ மட்டும் நிலைத்திருந்தாய்
நிலைத்தும் இருப்பாய்
எத்தனை சக்திகள்
உன்னுள் அடக்கம்

மழை கூட மண்டியிடும்
பூமி வந்து முத்தமிட
அனல் கூட ஆர்ப்பரிக்கும்
அமைதியாய் நீயிருந்தால்

வாயுவும் வலம்வருவான்
உனைத் தீண்டி உலகாள
பூமித்தாய் காத்திருப்பாள்
நீ
பொங்கி வந்து பூத்திருக்க

உன்னை நாமழித்தால்
வானக்குடையும்
வடிவிழந்து போய்விடுமே
ஓசோனை உடைத்துவிட்டு

எம் தாயை விட்டால்
வேறுகரு எமக்கேது?
தருவே உனக்கு
தெருவும் கருவாகும்!

No comments:

Post a Comment