Sunday, April 8, 2012

நம்பமுடியவில்லை!



அழிவு தந்த ஆழியா - இப்படி
அமைதியாய் இருப்பது?
ஆர்ப்பரித்த கடலா -இப்படி
அடங்கிக் கிடப்பது?
நம்ப முடியவில்லை – என்னால்
நம்பவே முடியவில்லை!

ஆயிரமாயிரம் உயிர்களுக்கு
உறைவிடமளித்த கடலா!
கோடி உயிர்களைக்
கொள்ளையடித்தது ? - இதையும்
நம்பவே முடியவில்லை?

இமய மலையிலும்
பெரிய மலைகளும்
கற்பகத்தருவாய்ப்
பற்பல மரங்களும்
கானகம் போலொரு
காட்சிகளும் உன்னுள்
காணக்கிடைக்குமாமே! - இதெல்லாம்
நம்பவே முடியவில்லை!

அறிவாளிகள் அதிகம்
பேசாமல் இருப்பராமே – ஆனால்
எத்தனை அதிசயம் உன்னுள்
மொத்தமாய் வைத்தும்
இத்தனை காலமாய்
அலைமொழி கொண்டு
கரையுடன் உனக்கு – அப்படி
என்னதான் பேச்சு?

சிற்பமாய் எத்தனை
சிலை வடித்தாய் -முருகை
கற் பாறைதனில்
மொத்தமாய் எப்படி
உயிர்கொடுத்தாய்
உயிரியின் ஆரம்பமாய் - பின்
அரவணைத்தாய் - நல்
வரங்கொடுத்தாய் - மீனவரை
வாழவைத்தாய் -இறுதியில்
சாவடித்தாய் - உனை
நம்பவே முடியவில்லை!

No comments:

Post a Comment