Sunday, April 8, 2012

உழைக்கும் உதிரம்


உழைப்பதற்கே
உதிரும் அந்த உதிரம்
பாடலைத் தாங்கிவரும்
காற்றலைபோல
வரிகள் மட்டும் நேசிக்கப்படுகின்றன
காற்றலைகள் தூஷிக்கப்படுகின்றன

காற்றலைகள்
இரசிக்கப்படா விட்டாலும் - அவை
நசுக்கப் படாமலிருக்கட்டும்

தேநீர் நிறமுணர்த்தும்
அவர் சோகங்களை

அது கூட கரையும் வரை
கறுப்பாலே
மறைக்கப்பட்டேயிருக்கிறது

அவர்தம் சோகங்கள்
ஊமையின் கனவுகளல்ல
ஓரப் பனிமலைகள் - உருகினால்
உலகமே உதிர்ந்து விடும்

இவை சோகங்களை
உணர்த்துவதற்காக அல்ல
தேவைகளை உணர்வதற்றாக

தனித்தனி வலுக்களை
புணர்த்துவோம் புதுமைசெய்ய

No comments:

Post a Comment