Sunday, April 8, 2012

கோடிஸ்வரன்



ஆயிரம் இரவல்களின்
சொந்தக்காரன் நான்

ஓர் இரவேனும்
முற்றுப்பெறாமல்
விழித்திருக்க
யாசகம் கோரும்
உபாசகன் நான்

விடிந்தால்
விடைகேட்கும் - என்
நிம்மதி

இருந்தாலும்
நானும் - ஒரு
முக்கிய புள்ளிதான்
ஊரவர்க்கு

என்னை சந்திப்பதே
அவர்களின்
முதல் வேலை

பாவம்
'விரைவில் தருகிறேன்'
என்ற
ஒரே விடைக்காய்
ஒவ்வொருநாளும்
காத்திருப்பார்கள்

பெயரைத்தவிர
அனைத்திலும்
ஏழை நான்.

No comments:

Post a Comment