Sunday, April 8, 2012

உயிரைத் தேடி...




பெயர் மட்டும் உண்டு 
'உயிர்' என்று
அழைக்கத்தான் ஆளில்லை

யாரென்றும் தெரியவில்லை
யாருக்கும் புரிவதில்லை

உயிர்...
மரணத்தின் எதிரியா?
இரண்டும் ஒன்றாய்
பயணிப்பதேயில்லை

மரணம்....
உயிருக்கு மதிப்பளிக்கிறதோ?
உயிரின் விளிம்பில் கூட
மரணம் வருவதில்லை

திண்மத் திரவியமோ? - உயிர்
திரவமோ? தீக்கொழுந்தோ?
காற்றின்றிப் போனாலும்
மரணம் மரிப்பதில்லை



உயிரைத்தேடித்தேடி
மரணத்தைக் கண்டபின்னும்
வரமொன்று கேட்டு
உயிரைத்தான் தேடுகிறேன்.

No comments:

Post a Comment