Sunday, April 8, 2012

உயிர்க்கொடி



அனல் பூவில் தேன் துளியாய்
மெழுகொப்ப பல மக்கள்
கனல் மண்ணில் சிறுபுழுவாய்
துடிதுடிக்கும் ஒரு தேசம்

பிறையெனவே மறைகிறது
மறை தந்த மனிதம்
அதிலே
கண்ணீரால் கடல் செய்து
உதிரத்தால் ஓடம் விட்டு
உயிரின் அந்தத்தில்
ஊஞ்சலாடும் ஓர் உயிர்
தன் சொந்தத்திற்காய்

தூரத்தில் ஒரு சொந்தம்...

கண்கண்ட விம்பம்
கபாலம் அடையமுன்பே
அறுந்தது
அவன் உயிர்க் கொடி மட்டுமல்ல
காலனின் கல் மனதுந்தான்.

No comments:

Post a Comment