Sunday, April 8, 2012

தனிமையின் தாகம்


தாங்க முடியவில்லை
தலைவா உனைப்பிரிய
தவிர்க்கவும் முடியவில்லை
யுத்தம் நீ புரிய

தோல்வியின் துயர்கூட - என்
என் தனிமை வென்றுவிடும்
வெற்றி வரும் வேளை
கண்ணீர் அதைக்கழுவும்

ஒளவைக்குத் தெரியவில்லை
தனிமை கொடியதென்று
அகமும் அறிவதில்லை
அஃதே உண்மையென்று

மன்னர் வரும் வரையும்
மலரே! மடி தருவாய்
ஏனின்றுன் இதழ்கூட
கருங்கல்லாயக் கனக்கிறது?

ஊடல் சுகம் கூட
உடனே தெரிவதில்லை
கூடல் வரும்வேளை
கூடவே கூடிவரும்

உன்னை நினைப்பதில்லை
ஏனென்றால்.....
காலிமைப் பொழுதிலும்
நானுன்னை மறப்பதில்லை.

No comments:

Post a Comment