Sunday, April 8, 2012

நீண்ட இரவுகள்


நீண்ட இரவுகள்
முடிய வைக்க முடியவில்லை
ஏனோ தெரியவில்லை
இரவுகளும் இனிக்கிறது

கடிகாரம் மயங்கியதோ? - ஏனோ
மணிமுள்ளும் நகரவில்லை
காதல் இதுதானோ? - இல்லை
காதலின் கட்டியமோ?

சுகங்களும் கூட இங்கு
இனந்தெரியா சுமையாகும்
சுற்றிய இருளெல்லாம்
எமக்காக ஒளிவீசும்

இருதயம் கூட இங்கு
இமயமாய்க் கனக்கிறது
என்னவென்று மட்டும்
இன்றுவரைப் புரியவில்லை

No comments:

Post a Comment