Sunday, April 8, 2012

காத்திருப்பு


ஈர நிலா அறியும்
இருட்டாத சூரியன்
இரண்டுமே சேர்ந்தறியும்
உனக்காய் நான் காத்திருக்கும்
அந்த
இரவுப் பகல்களை


உன் நினைவுச் சுமைகளால்
கூன் விழுந்த என் காதலுக்கு
உன் நினைவுகளே ஆதாரம்
அளிப்பதை நீ அறிவாயா?


காதல் அடர்த்தியை நான்
முழுதாய் அறிவதற்கா
மூடி வைத்துன்னை
முற்றாக நீ மறைத்தாய்


கனாக்களில் நாம்
சங்கமித்த
கானலின் காலங்களை
கண்ணீரிக் கரைப்பதற்கு
கண்ணீருக்காய் அழுகின்றேன்


முடிவிலி ஜென்மங்கள்
முற்றாய் முடிந்த பின்னும்
புதிதாய்ப் பிறப்பெடுப்பேன்
தினம் உனை நினைப்பதற்கு.

No comments:

Post a Comment