Sunday, April 8, 2012

பிரபலங்களின் தோட்டம்


பார்த்துப் பார்த்து
பக்குவமாய் ஒரு பயிர்வளர்த்தேன்
விளைச்சலும் கண்டது அமோகமாய்
விற்பனையோ
போகவில்லை சுமூகமாய்

இலட்சமாய் பிரிந்து - பின்
சுக்குநூறானேன் ஒவ்வொன்றாய்

என்ன அதிசயம்!
பிரபலங்களின் தோட்டத்தில்
பிஞ்சாய்ப் பிறந்தாலும்
பதராய்ப்போனாலும்
கேட்கிறார்கள்
'நன்றாயிருக்கிறது
நாலைந்து தாருங்கள்'

பின்புதான் புரிந்தது
தெரிவு செய்ய தேர்ச்சி பெறா
மக்கள் விரும்புவது
விளைச்சலையல்ல
விவசாயிதான் என்று.

No comments:

Post a Comment