Sunday, April 8, 2012

விஞ்ஞானம்


எட்டாத வானை
தொட்டுப்பார்க்க
துரத்திச் செல்லும் - எமக்கு
வடிவமற்ற உருவைக் கூட
வரைந்துகாட்டும்
'வா' என்றால்
'போ' என்று பொருளென்று
பொருத்தமாய் சொல்லும்
வந்த பிணி   போவதற்கு
வழியும் சொல்லும்.
மெஞ்ஞானம் என்று
மெய்யுரைத்தால்
சீச்சீ..... பொய்வாதம்
போய் வா என்று சொல்லும்

மெய்தான் என்று
மெய்யாய்த் தெரிந்த பின்னும்
பொருத்திப் பார்த்து
போருக்கழைத்து - பின்
திருட்டுத்தனமாய்
தின்றுபார்க்கும்- அந்த
விஞ்ஞானம்.

No comments:

Post a Comment