Sunday, April 8, 2012

வாழ்க்கை


கனவுகளும் அல்ல
கற்பனையுமல்ல
காலங்களில் மட்டும் நினைவுகள் பேச
நீள நதிக்கரையில நீண்ட நெடுமூச்சு
நிஜத்தின் முடிவுகளா? - இல்லை
நிழலின் தொடக்கங்களா?

பசுமை நினைவுகளில் பாதி
பழைய பாதைகளில் பாதி
பயங்கள் கூட பயப்படும் சிலவேளை
வளர்கின்றோம் என தேய்கின்றோம்.

படைப்புகள் பணயமாய்
பார்வையில் பனிமூட்டமுடன்
பாலையில் மலர்ந்த - எங்கள்
சோலையின் சோகங்கள்.

No comments:

Post a Comment