Sunday, April 8, 2012

தெருவோர ராஜாக்கள்


தெருவோர ராஜாக்கள்
இராணிகளும் கூட

தெளிவான வாழ்வில்லை
எனநினைக்கத் தோன்றும்
தெளிவாக நோக்கயிலே
தெளிவென்று தெளிந்திடலாம்

கோடியாய் உழைப்பவனும் -தெரு
கேடியாய் உழல்பவனும்
வாழ்க்கை பாதைதனில்
வழுக்காமல் செல்கின்றார்

உறங்க வீடில்லை
உண்ண உணவுமில்லை
இவையெல்லாம் இல்லையென்று
இம்மியும் கவலையில்லை

ஐயம் அகற்றி விட்டேன்
ஐயா! உமைக்கண்டு
வாழ்வு சாவெல்லாம்
வல்லவன்; வகுத்த வழி

No comments:

Post a Comment