Sunday, April 8, 2012

உங்களுடன் ஒரு நிமிடம்...


என்னால் நம்பவே முடியவில்லை. என் எழுத்துக்களுக்காய் நீங்கள் நேரம் ஒதுக்கியிருப்பதையும் உங்களின் நேரத்தில் நான் புகுந்துகொண்டதையும்.
    இதனால் எனது நீண்டகாலக் கனவோ அல்லது இலட்சியமோ நிறைவேறியதாய் மகிழ்ச்சியில்லை. ஏனென்றால் மழையில் முளைத்த காளாhன் போன்றதொரு சம்பவமே இது. என்றாலும் ஆனந்தத்தின் எல்லையை அடைந்துவிட்டதாய் ஒரு உணர்வு.
    நிச்சயமாக இத்துலங்கலுக்கும் நிறையவே தூன்டல்களும் இருக்கின்றன. அவற்iயும் சொல்லியே ஆகவேண்டும்.
    முக்கியமாக 'செங்கதிர்' சஞ்சிகை. அது எனது முதல் கவிதையை தனது இளங்கதிரால் தாங்கிவந்தது. அதன் ஆசிரியருக்கே எனது முதல் நன்றி.
ஆனால் என்னை மீண்டும் ஒரு கவிதை எழுத வைத்தது, இல்லை, மீண்டும் மீண்டும் கவிதைகளை எழுத வைத்தது, எனது கவிதைக்குக் கிடைத்த முகமறியா இரசிகையிடமிருந்து வந்த முதல் பாராட்டு மடல். இவரை ஒரு இரசிகை என்பதை விட அப்போதிருந்த ஒரேயொரு இரசிகை என்றும் கூறலாம். இதைவிட முக்கியமாக என்முதல் கவிதைக்கு காரணமாகிய எனது நண்பன் எனக்குத் தனது படிக்குமறையில் பரிசளித்த தனிமையைக்கூடக் கூறலாம்.
    அதன் பின் என் கிறுக்கல்களைச் சலிக்காமல் இரசித்த அனைத்து நண்பர்களும் எனக்கு தூண்டல்காக இருந்து ஊக்கமளித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
    என் கவிதைகளைப் பற்றியும் ஒன்று கூறவேண்டும் பொதுவாக நான் எழுதியிருக்கும் கவிதைகளனைத்தும் முற்றுமுழுதாக இலக்கியத்திற்காக மட்டுமே எழுதப்பட்டவை. அவை ஒரு செய்தியையோ அல்லது அறிவுரையையோ கூறவில்லை என்பதைக் கவனத்தில் கொள்க
என்னைப்பொறுத்தவரை ' கலை கலைக்காகவே ''
இரசித்துவிட்டு மறந்துவிடுங்கள் ஏனென்றால் நீங்கள் இரசிக்கவேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றன.

20-04-2010                         இப்படிக்கு
                                          ச.மதன்

No comments:

Post a Comment