Sunday, April 8, 2012

ஆசியுரை


ஓம்

சதா ஆதார சரஸ்வதி அருள் நிறைக.
உபன்னியாசமணி,முத்தமிழரசு,சிவயோகச்செல்வன், த.சாம்பசிவம்
(மட்டக்களப்பு  காயத்ரி  கலாசாரபீட  சிவாச்சாரியார்)

புதுக்குடியிருப்பெனும் புண்ணியபூமிக்
கதுப்புகள் தாமாகப் பால் கசிவது போல்
சதாசிவம்  மைந்தன் மதனுயிரோவிய
சதாகதிதானிந்த  கவிதைச்சரம்
விதவிதமான  இளசுகள் வாழ் உலகில்
புதல்வன் மதன் புதுக்கவி பரவியுளான்
புதையொடு புதைதல்  புதைந்துள்ள ஓவியம்
இதையில் பூத்துள்ள  இதயத்துடிப்பேதான்
அப்பாவின்  உணர்வுத்  தெப்பத்திலேறி மதன்
அன்னைக் குவமை இல்லையென இடித்துரைத்து
தப்பாது பட்டிப்பூத் திறனைக் கூறியவன்
சின்ன ஒருவனாய் கனவில் நனவானான்
சின்ன வயதில் தூக்கி உச்சி மோந்தவனின்
உன்னத படைப்பால் உவகைமிகவானேன்
இன்னுமின்னும் உயிரோவியத்தையருந்த
முன்நின்றருள் செய்வாய்  மூத்த பிள்ளாய் நீ

சதா என்னன்பில் சிக்குண்ட மதனே
நிதானமாய் நிலவுலகில் நற்கவிதை
விதானமாய் நீ தந்து புகழ்விளங்க
ஆதார சரஸ்வதி அருள் நிறைக.

அன்புறு சிந்தையன்
சிவயோகச்செல்வன் த.சாம்பசிவம்

No comments:

Post a Comment