Sunday, April 8, 2012

மறக்க முடியவில்லை



வயல்களின் வசந்தமும்
மரநிழல் மாருதமும்
மறக்க முடியவில்லை

கடலோடு கதைபேசும்
கரையோர மணற்கோட்டை
கட்டிய காலங்களும்
மறக்கமுடியவில்லை

மணல்வீட்டு மாளிகையில்
சிரட்டைக் கறிச்சட்டி,
படிப்பறியாக் காலங்களில்
படிதாண்டும் பரீட்சைகள்,
தவணை விடுமுறையில்
தலைதெறிக்க விளையாட்டு,
விடுமுறை விடைகேட்கும்
விரைவாக எனத்தோன்றும்
பள்ளிக் காலங்களும்
மறக்கமுடியவில்லை


நித்திரையில் கீறும்
தமிழ்ச் சித்திரங்களும்
மறக்கமுடியவில்லை
இவையென்றும்
மறக்க முடிவதில்லை

No comments:

Post a Comment