Sunday, April 8, 2012

பட்டிப்பூ



தூய்மையானவள் நீ -ஏன்
துயருடன் வாழ்கிறாய்?
எங்கள் துயரையும் துடைக்கலாமே

சுமையாக நோய் வந்தால்
சுகமாக்க உன் வேர்கள்
புற்றொன்று வந்தாலும்
சட்டென்று போக்கிடுவாய்

சுவாலை முடிவினிலும் -உன்
சுகந்தமே தெரியவில்லை

சுமையென்பர் வீட்டில்
சுடலையின் சொத்தாக
பலகாலம் காட்டில்

தேடல்களின் தேக்கம் நீ
தொலைவுகளின் தொலைவும் நீ
காட்டிவிடு - உன்
சுவட்டின் புதையல்களை

No comments:

Post a Comment