Sunday, April 8, 2012

நிலவுதாசன்


அன்புள்ள நிலவுக்கு
அடிமை எழுதுவது
உனைப்பாடா கவிஞனென்று
ஒருகணம் நான்
அகந்தைகொண்டேன்.

நிமிடமொன்றில்
நிறுத்திவிட்டாய் - உன்
காலடியில் - பின்
அடிமையாக்கியெனை
சிறைபிடித்தாய் உனதழகால்
இப்போது நான்
முப்பதுநாளும்
முழுநிலவு கேட்கும்
முழுநேரப் பிச்சைக்காரனானேன்.
தரமறுத்தால் - உன்
உயிரறுப்பேன்
இல்லாவிட்டால் - நானே
உயிர்துறப்பேன்.
இப்படிக்கு
உனதடிமை.

No comments:

Post a Comment