Sunday, April 8, 2012

கனவு நனவாகிறது...

அன்றொருநாள் காலை
அங்கதன் புறப்பட்டான்
"அம்மா போய் வாறேன்"
வீரமாய் ஒரு குரல்
'கவனமாய்ப் போய் வா"
கவலையுடன் பதில் குரல்

முகத்தில் ஏதோ தேடல்

அங்கதா!
எனைத் தீண்டாயோ?
செருப்பின் ஏக்கம்
மறுபுறம்

"அம்மா புத்தகம்"
பதிலுக்குப் பின்புதான்
அங்கதனுக்கு
நாளைகளின் அர்த்தம்
அஸ்;தமன மாகிறது.


படலை தாண்டியதும்
வீதியெல்லாம் இவனின்
விளையாட்டரங்கு

சோறு மட்டும் எட்டாக்கனி
சேறுகள்தான் - இவன்
செல்லத் தோழி

இதனால் அங்கே - தன்
நிரந்தர வாடிக்கையாளனுக்காய்
வழிபார்த்துக் காத்திருந்தது
தலைமை வாத்தியாரின்
கைப்பிரம்பு.

வழமைமுன் நிகழ்வை
வடிகட்டி நுழைந்தான்
வகுப்பறைக்குள்
"அங்கதா வாரும் - அடுத்த
வகுப்புத்தலைவன்
நீதானடா!"
அன்பான வார்த்தைகள்
அங்கதனை வரவேற்றன


நீண்டநாள் கனவு
நிஐமாய் நிறைவேறியதால்
பேரொலி பெருக்கினான்
பேரின்பமாய்

"என்னடா சத்தம்!
கனவேதும் கண்டாயா?"
அம்மாவின் அனுங்கலொலி
அங்கதனை அருட்டியது.

தண்ணீரை மென்று
மீண்டும் தலைசாய்ந்தான்
தலையணையில்

No comments:

Post a Comment