Sunday, April 8, 2012

சின்ன ஒருவன்


வேகமாய் புறப்பட்டன
வேரறுத்து மரங்கள்
மனித வேட்டைக்காய்

சிலந்தி வலைகட்டி
சின்ன மனிதனை
சிறைபிடிக்கப் பார்த்தன
சிட்டுக்குருவிகள்

பாவமாய்ப் பயந்த மனிதன்
பதுங்கினான் புல்மறைவில்

கட்டெறும்புகள் அவனை
காட்டெருமையாய் முறைத்தன
குட்டை மரங்களும்
நெடுந்தூரம் காட்டின

அங்குல நகர்வுக்கே
ஆண்டுகள் வேண்டிய அவன்
ஆபத்தைக் கண்டதும்
என்ன செய்வான்!

சின்ன ஒருவனாய்
சிலவேளை இருந்திருந்தால்
இன்னலுக்கு இளைப்பாற
என்னபாடு பட்டிருப்பான்!

No comments:

Post a Comment