Sunday, April 8, 2012

இளைஞரே வாரீர்


உலகம்  நம் கையில் காட்டலாம் வாரீர்
அன்பும் பண்புமதைக் கூட்டலாம் வாரீர் 
ஊனமாய்  நம்; சமூகம் உறங்கிக் கிடப்பதனை
பாணமாய் மாற்றி நாம் படையெடுப்போம் வாரீர்
வானம் தூரமில்லை தாண்டலாம் வாரீர்
மண்ணும் தாழ்வில்லை வாழலாம் வாரீர்
கல்வி அற்றவனை கல்வி கற்றவர் நாம்
எள்ளிநகை யாடாமல்
'கல்' என்று கல்வி புகட்டுவோம் வாரீர் 
இழிவென்று ஒரு தொழில்
இனி இங்கு இல்லையென
இடியெனவே கூறிடுவோம்
இன்றே நீ எழுந்து வாரீர் 
மனித ஜாதிதனை புனித மாக்கிடவே
சாதிமத பேதமின்றி
சரித்திரம் படைக்க வாரீர்!

No comments:

Post a Comment